Sunday 17 June 2012

அறிவருளும் ஆனைமுகவோன்




மாலோன் மருகன் என்றாலே நாம் குறிப்பிடுவது ஆறுமுகனைத்தான். ஏனோ அவன் அண்ணன் ஆனைமுகவனும் மாலின் மருகனே எனபதை அவ்வப்போது மறந்து விடுகிறோம். திருமாலுடன் கணபதி தொடர்பான சில கதைகள் உள்ளன. பிள்ளையாரின் பிள்ளைபிராயத்தில் அவர் திருமாலின் சக்கரத்தை வாயில் போட்டுக் கொண்டவுடன், அதை வெளிக் கொணர்வதற்காக மஹாவிஷ்ணு தோப்பிக்கரணம் போட்ட கதையை நாம் முன்னமேயே படித்தோம். அதைப் போலவே ஸ்யமந்தகோபாக்யானத்திலும் கண்ணன்-கணபதி லீலைகள் வருகின்றன.

அருணகிரிநாதரின் பாடல்களில் நமக்குக் கிடைத்தவற்றில் வெகு சிலதிலேயே இது சம்பந்தமான குறிப்புகள்  காணப்படுகின்றன. ஆனால் நமக்குத் தெரிந்த வரையில் அபூர்வமாகவும் வேறு எங்கும் கிடைக்காததாகவும் உள்ள செய்தி திருப்புகழில் வருகிறது. பாகவதத்தை அறிந்தவர்கள், தேவகி கணபதி பக்தையா என்பதையும் இங்கு சொல்லப்படும் தகவல் அதிலும் வருகிறதா என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணன் லீலைகளை சுகருக்கும் சூர்தாசருக்கும் சமமாக நம் ஸ்வாமிகள் அனுபவித்திருக்கிறார்.  அவன் செய்த சில லீலைகளை சந்தத் தமிழில் அருணகிரி ஸ்வமிகள் வார்த்தைகளில் சுவைப்போமா?
  
உருவு பெருகு அயல் கரியது ஒர் முகில் எனு மருது நெறி பட முறைபட
உருவு பெருகு அயல் கரியது ஒர் முகில் எனு மருது நெறி பட முறைபட
மிக மாரி உமிழ நிரைகளின் இடர் கெட அடர் கிரி கவிகை இட வல மதுகையும்......குருவு மடியவ 930

மலை போன்ற உரலினுடன் தவழ்ந்து சென்று கரிய மேகம் போன்ற மருதமரம் முறிக்கப்பட்டு விழவும் கனத்த மழை பொழிந்து, பசுக்களின் துயர் நீங்கி, கோவர்த்தன மலையை குடையாகப் பிடிக்க வலிமையையும் (உடையவன் கண்ணண்)

பேசாதே போய் நின்று உறியில் தயிர் ஆ ஆ ஆ ஆ என்று குடித்து ...
அருள் பேராலே நீள் கஞ்சன் விடுத்த எதிர் வரு தூது பேழ் வாய் வேதாளம் பகடு ஐப் பகுவாய் நீள் மானாளும் .
சரளத்தோடு பேய் ஆ (னா) ள் போர் வென்று எதிரிட்டவன் ........................................    நேசாசாரா 626

எவருக்கும் தெரியாமல் போய் நின்று, உறியிலிருந்த தயிரை ஆஹா ஆஹா என்று பருகி,  அருள்  இல்லாத கம்சன் அனுப்பிய  தூதுவளாகிய, பெரிய வாயைக் கொண்ட பூதனை என்னும் பேயாகிய அரக்கியியை வென்று எதிர் நின்றவனாகிய கண்ணன்

காயாத பால் நெய் தயிர்க் குடத்தினை
ஏயா எண்ணாமல் எடுத்து இடைச்சிகள்
காணாதவாறு குடிக்கும் அப்பொழுது
உரலோடே கார் போலு மேனிதனைப் பிணித்து ஒரு
போர் போல் சோதை பிடித்து அடித்திட
காதோடு காது கையில் பிடித்து அழுது
இனிது ஊதும் வேயால் அநேக விதப் பசுந் திரள்
சாயாமல் மீள அழைக்கும் அச்சுதன்.........................................................................மாயாசொரூப 580

 காய்ச்சாத பால், நெய், தயிர்க் குடங்களை சற்றும் யோசிக்காமல் எடுத்து இடைச்சியர்கள் பார்க்காத வண்ணம் குடிக்க  அவனுடைய  நீலமேகம் போன்ற திருமேனியை உரலுடன்  கட்டி தாயாகிய யசோதை பிடித்து அடிப்பது போல் பாவனை பண்ண  அப்போது இரண்டு காதுகளையும் கைகளால் பிடித்துக் கொண்டு அழுதும் ,  இனிமையான நாதம் தரும் புல்லாங்குழலால் பல விதமான பசுக் கூட்டங்களை மேய்த்து அழைத்து வரும்ண்ணண்
இந்திர நீல வனத்தில் செம் புவி
அண்ட கடாகம் அளித்திட்டு அண்டர்கள்
எண்படு சூரை அழித்துக் கொண்டு அருள் ஒரு பேடி
இன்கன தேரை நடத்தி செம் குரு
மண்டல நாடும் அளித்துப் பஞ்சவர்
இன்புறு தோழ்மை உடைக் கத்தன்....................................................  .சிந்துர கூரமருப்பு 155

இந்திரனது காவலில் இருந்த இருண்ட காண்டவ வனத்தில் அரக்கர்களை எரி ஊட்டியும்,  பூதலம் முதல் அண்ட கோளத்தில் இருந்தவர்களை அரக்கர்களின் துன்புறுத்தலிலிருந்தும் காப்பாற்றியும், தேவர்களின்  அளவிடமுடியாத துன்பத்தை நீக்கி, அவர்கள் நாட்டைத் திரும்பித் தந்து அருளியும்,  அர்ச்சுனனுடைய அழகிய தேரை சாரதியாய் நடத்தியவன்,  பாண்டவர்களுக்குத அவர்களின் நாட்டை  தந்து அப்பாண்டவர் ஐவரின் இன்புறு நட்பைப் பூண்டிருந்த தலைவன்


ஆன் நிரை துரந்து மா நிலம் அளந்து
ஓர் ஆல் இலையில் அன்று துயில் மாயன்
ஆயர் மனை சென்று பால் தயிர் அளைந்த
ஆரண முகுந்தன் .....................................................................................................வேனின் மதனைந்து -970

பசுக் கூட்டங்களை ஓட்டிச்சென்று  மேய்த்தவன், பெரிய பூமியை ஓர் திருவடி கொண்டு அளந்ததவன், ஓர் ஆலிலையில் ஊழி அன்று துயில் கொண்ட மாயன் . இடையர் வீடுகளில் போய் பாலையும், தயிரையும் சேர்தது மகிழ்ச்சியுடன் உண்டவன், வேதம் போற்றும் முகுந்தன்

மருது பொடிபட உதைத்திட்டு ஆய்ச் சேரி
மகளிர் உறிகளை உடைத்துப் போட்டவர்
மறுக ஒரு கயிறு அடித்திட்டு ஆர்ப்புற அழுது ---------------------------------- பொருத 1183

மருத மரமாகி வந்த சகடனைப் பொடியாகுமாறு உதைத்தவன். ஆயர் சேரியில் இருந்த மகளிருடைய உறிகளை உடைத்துப் போட்டவன். ஒரு கயிற்றினால் அடிபட்டு கட்டுண்டு அழுதவன்.


உறி தாவும் ஒரு களவு கண்டு தனி கோபத்து
ஆய்க் குல மகளிர் சிறு தும்பு கொ (ண்) டு மோதிச் சேர்த்திடும்
உரலொடு தவழ்ந்த நவநீதக் கூற்றனும்  ................................................... பரதவித 1173

திருட்டுத்தனமாக உறி மீது தாவியதைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டவர்களாகிய ஆயர் குலப் பெண்கள் சிறு கயிறு கொண்டு கட்ட, கட்டி வைத்த உரலோடு தவழ்ந்த வெண்ணெய் திருடியவன் என்று பேசப்படுபவனாகிய கண்ணன்

இவ்வாறு இன்னும் பலப்பல பாடலகளில் நாம் கண்ணனின் லீலைகளைக் காணலாம்.அத்துடன் அவனுடைய அவதார   நோக்கமான தர்மத்தை பரிபாலனத்தினூடே எதிர்வரும் தடைகளை  நீக்க பல அசுரர்களை தான் பிறந்த சில தினங்களிலிருந்தே அழிக்க வேண்டி வந்து விட்டது.

பகாசுரன், அகாசுரன், தேனுகாசுரன், சகடாசுரன் முதலியவர்களை வதம் செய்தது, பூதனை பால் குடித்து கொன்றது இப்படியாக  சின்னக் குழந்தையாக வீர சாகசங்கள் எல்லாம் செய்ய திறனைக் கண்ணணுக்குக் கொடுத்தது யார் என்கிறீர்களா? எல்லாம் அந்த விநாயகப் பெருமான்தான்.   அட என்ன புதுக் கதை என வியக்கிறீர்களா? நாங்கள் என்னப் புதுக்கதை சொல்லப்போகிறோம், அந்த அருணகிரிநாத ஸ்வாமிகள் சொன்னதைத்தாம் சொல்கிறோம்

அப்படியா, என்ன சொல்லிருக்கிறார் என்று பார்க்கலாமா?

இடையர்சிறு பாலை திருடிகொடு போக
இறைவன்மகள் வாய்மை   அறியாதே
இதயமிக வாடி யுடையபிளை நாத
கணபதியெ னாம . முறைகூற
அடையலவர் ஆவி வெருவஅடி கூர
அசலுமறி யாமல்  அவரோட   -
அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
அறிவருளும் ஆனை ...... முகவோனே. ................................................ விடமடைசு  5

இடையர் சிறு பாலை திருடி கொ (ண்) டு போக
இறைவன் மகள் வாய்மை அறியாதே
இதயம் மிக வாடி உடைய பி (ள்) ளை நாத எனு நாமம் முறை கூற
அடையலவர் ஆவி வெருவ அடி கூர அசலும் அறியாமல் அவர் ஓட
அகல்வது எனடா சொல் எனவும் முடி சாட
அறிவு அருளும் ஆனை முகவோனே

தாயாகிய தேவகி கவலைப்படுகிறாளாம் கண்ணணுக்கு கம்சனால் ஏவி விடப்படவர்களால் ஏதாவது கேடு வந்து விடுமே என்று. எனை ஆண்டருளும் பிள்ளைபெருமானே கணபதியே என விநாயகர் பெருமானைத் துதிக்கக் கணபதி பெருமானும் பாலகிருஷ்ணணை ஆபத்திலிருந்து காப்பாற்றினார் என்பது அருணகிரிநாதர் சொல்லும் தகவல் இந்த விநாயகர் துதியில். இது திருமுருக கிருபானந்தவாரியாரின் விளக்கம்.

அரசன் உக்ரசேனனுடைய மகள் தேவகி  பின்னால் நடக்கவிருக்கும்   உண்மையை அறிய மாட்டாதவளாக (இறைவன் மகள் வாய்மை அறியாதே ) (அதாவது கண்ணனால் கம்சன் ஏவிவிட்ட அசுரர்கள் கொல்லப் படுவார்கள் என்ற உண்மை தெரியாமல்)   மனம் வாட்டம் உற்று, (இதயம் மிக வாடி) என் மகனை ஆண்டருளும் பிள்ளைப் பெருமாளே, கணபதியே என்னும் நாமங்களை வரிசைப்படக் கூற (உடைய பி(ள்)ளை நாத எனு நாமம் முறை கூற) அவள் முறையீட்டுக்கு இரங்கி, இடையர்களுடைய  பாலை கண்ணன்  திருடிக் கொண்டு போக  (அதாவது கோபியர்களின் மனத்தைக் கண்ணன் தன் வசமாக்க),  பகைவர்கள்  தங்கள் உயிர்களுக்கு அஞ்சும்படி நீ அடி எடுத்து வர, (நீ வரும் ஒலியைக் கேட்டு) அயலார் அறியாமல் அவர்கள் ஓட, போவது ஏனடா சொல் எனக் கூறி (அகல்வதெனடாசொல் எனவுமுடி சாடஅவர்களைத் தாக்கும்  உணர்வை (கண்ணபிரானுக்கு) அருளிய யானைமுகத்துக் கணபதியே  என்பது துதி  (கோபியர்கள் கண்ணனை நோக்கி செல்கிறார்கள். பகைவர்கள் கண்ணனை விட்டுச் செல்கிறார்கள் என்பது உட்கருத்து)
இறைவன் மகள் தேவகி என்பது வாரியார் ஸ்வாமிகள் விளக்கம்.

இன்னொருவித கதை வரலாறும் இருக்கிறது இந்த பாடலில்

மதங்காபுரத்து அரசன் மகள் கோமளம். அவள் கணபதியை ஆராதிப்பவள். கணபதி பூசைக்கு வேண்டிய பாலை இடைச்சேரி என்ற பக்கத்து ஊரில் இருக்கும் அளகன் என்ற இடையனின் பெண் தினம் கொண்டு வந்து கொடுப்பாள். இறைவனுக்காகச் பால்தாங்கி வரும் பெண் அலங்கரித்து வரவேண்டும் என்பதற்காக கோமளம் தனது நகைகளை அணிந்துவர கொடுப்பாள். அப்படி அலங்கரித்துக்கொண்டு பாலை எடுத்துக்கொண்டு காட்டின் வழியே வரும் ஒரு சமயம் கள்வர்களால் வழிமறிக்கப்பட்டாள். நகைளைக் கவர்ந்து சிறுமிப்பெண்ணை ஒரு குகையில் அடைத்து வைத்தனர்.

பூசை நேரத்திற்கு பால் வராததினால் கோமளம் வருந்தி சிறுமிக்கு ஏதாவது ஆகிவிட்டதோ என மனம் பதைத்து தான் ஆராத்திக்கும் கணபதியை வேண்ட அவரும், கள்வர்கள் நகைகளை பங்கு போட்டுக்கொண்டிருக்கும் சமயம் அவர்களை தாக்கி அதட்ட அவர்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டு நகைகளோடு சிறுமியை விடுவித்தனர். அப்படி பக்தர்களுக்காகக் காக்கும் கடவுள் விநாயக பெருமான். அதைத்தான் அருணகிரி ஸ்வாமிகள் இங்கு சொல்கிறார் என்பார் குகஸ்ரீ என்கின்ற ரசபதி. (தகவல் உதவி ஸ்ரீ அய்யப்பன்)

அந்த அறிவருளும் ஆனைமுகவோன் நம்மையும் காக்கட்டும்
  
சாந்தா and சுந்தரராஜன்

THAKARA VARKA PAADAL




Thakara Varka Paadal

         திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
          
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
          
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
          
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே

Unless one is extra-ordinarily brilliant in Tamil literature, it is very difficult to comprehend the above passage which appears as the 54th stanza of Kandar Anthadi, composed by Arunagirinathar.  The background in which Arunagirinathar composed this song is very interesting.

Villiputhur Alwar was a scholar of high repute.  Though he was the recognized poet in the court of the King, Varapathi Atkondan, he was too proud of his accomplishments.  He used to go to different royal courts and challenge the Tamil Pundits there for a trial of talent.  He came to Tiruvannamalai, met the king there and challenged whether there is any poet in the town who can match him.  He laid down the rules that there would be a trial of talent between him and any other pundit where both would render song and the other one should be able to explain it.  Alwar also put up a strange condition that the pundit who failed to explain a song should pay the penalty of his ears being cut.  Arunagirinathar accepted the challenge, heard the song rendered by Alwar and successfully explained its meaning.  It was now the turn of Arunagirinathar and he rendered the 54th stanza from Kandar Anthadi comprising the letters ‘Thitha’ ‘Thatha’.  Villiputhur Alwar could not make out anything from this song and he meekly conceded defeat.  Arunagirinathar then explained the meaning of the song and said that he would not insist on the penalty clause. This trait of forgiveness earned Arunagirinathar the title ‘Arunagiri for Compassion’.  (Karunaikku Arunagiri).  The other title he received was ‘Vakkukku Arunagiri’ (Arunagiri for letters).  The meaning of the song as explained by Thiru Muruga Krupananda Variyar is given below:

திதத்தத் தத்தித்த திதத்தத் தத்தித்தஎன்னும் தாளமானங்களை,
திதி திருநடனத்தால் காக்கின்ற
தாதை பரமசிவனும்
தாத பிரமனும்
துத்தி படப்பொறியினையுடையதத்தி பாம்பினுடைய
தா இடத்தையும்
தித நிலைபெற்று
தத்து ததும்புகின்ற
அத்தி சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி தயிரானது
தித்தித்ததே தித்திக்கின்றதென்று
து உண்ட கண்ணனும்
துதித்து துதி செய்து வணங்குகின்ற
இதத்து பேரின்ப சொரூபியான
ஆதி முதல்வனே!
தத்தத்து தந்தத்தையுடைய
அத்தி அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத தொண்டனே!
தீதே தீமையே
துதை நெருங்கிய
தாது சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து மரணத்தோடும்
உதி ஜனனத்தோடும்
தத்தும் பல தத்துக்களோடும்
அத்து இசைவுற்றதுமான
அத்தி எலும்புகளை மூடிய
தித்தி பையாகிய இவ்வுடல்
தீ அக்கினியினால்
தீ தகிக்கப்படுகின்ற
திதி அந்நாளிலே
துதி உன்னைத் துதிக்கும்
தீ புத்தி
தொத்தது உனக்கே அடிமையாகவேண்டும்

Roughly translated, it would convey the following meaning: 

Oh Muruga, the Chief of all,
who is worshipped by Lord Brahma,
by Lord Vishnu who rests on the Adisesha snake
in the ocean of milk,
and manifesting as Krishna, drank the curd formed from the milk.
Oh Muruga who is worshipped by Siva,
the Lord who dances to the tune of Thithatha Thathitha
the Lord who serves the owner of Airavadham elephant, Deivayanai,
Oh Muruga, I pray;
before this body is consigned to the burning pyre
bless me to ever remain thinking of you.


Contributed by V.S. KRISHNAN

Wednesday 13 June 2012

AANI MOOLAM CELEBRATION ON 03.07.2012



ஆனி மூலம் திருப்புகழ் இசை வழிபாடு

03 ஜூலை 2012

அழைப்பிதழ்





An appeal: Anbargal are requested to offer voluntary service for video&audio coverage of Aani Moolam vazhipaadu  for uploading it in this blog.

Sunday 10 June 2012

வைகாசி விசாக வைபவம்

 வழக்கம் போல் வைகாசி விசாகம் செம்பூர் சிருங்கேரி மட வளாகத்தில் 030.6.12  அன்று அதி விமரிசையாக நடை பெற்றது.மும்பையின் பல பகுதியிலிருந்து அன்பர்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள்.

விநாயகர் பூஜை, ஷண்முக சஹஸ்ரநாம அர்ச்சனையை தொடர்ந்து அன்பர்களின் இசை வழிபாடு சுமார் மூன்று மணி நேரம் நீடித்தது, அதில் பல அன்பர்கள் மெய்யுருகி பரமானந்த நிலையில் மூழ்கியதை கண் கூடாக பார்க்கமுடிந்தது.

முடிவில் நேருல் அன்பர் திரு .ராமகிருஷ்ணன் கந்தர் அந்தாதியின் பொருள் விளக்கங்கள் அடங்கிய தம் படைப்பை நூல் வடிவத்தில் முருகப்பெருமானின் பாதக்கமலத்தில் சமர்ப்பித்து பெருமானின் அருளையும் அன்பர்களின் ஆசிகளையும், வாழ்த்துக்களையும் பெற்றார் .நூலின் முதல் பிரதியை ராஜி மாமி பெற்றுக்கொண்டார். அன்பர் ராம கிருஷ்ணன் தம் படைப்புக்களை இதுபோல் வழிபாடுகளின்போது வெளியிடுவதை மரபாக கொண்டுள்ளார். அவரது அடுத்த படைப்பை விரைவில் எதிர் பார்க்கிறோம்.அது போல் அவர் நம்முடைய இந்த மின் தல அமைப்புக்கும் தம் அறிய கட்டுரைகளையும் அளிக்க வேண்டுகிறோம், எதிர்பார்க்கிறோம்.

அன்பர்களின் அடுத்த வழிபாடு ஆனி மூலம் அன்று (3rd July 2012)  (அருணகியாரின் அவதார தினம்) முலுண்ட் வாணி வித்யாலயவில் நடைபெற உள்ளது.