Saturday 29 September 2012

அன்பர் முரளிக்கு கண்ணீர் அஞ்சலி...



அன்பர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகளை அளித்து வந்த நாங்கள் மிகவும் துக்ககரமான ஒரு செய்தியைத் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

Thana  அன்பர்    முரளி கோபாலகிருஷ்ணன்  சில நாட்கள் நோய்வாய்பட்டபின்  26-09-12 அன்று  முருகப்பெருமானின் திருவடியை  சென்று அடைந்தார்.அவருக்கு வயது 41. அன்பர் முரளி மும்பை  திருப்புகழ் அன்பர்களுக்கு நன்கு பிரபலமானவர்.புனே வில் உள்ள Dehu Road  முருகன்  ஆலயத்தில் ஆண்டு தோறும் டிசம்பர் 25 தேதி நடைபெறும்  வழிபாடு நிகழ்ச்சிக்கு மூல காரணமானவர்.அன்பர்களை புனேக்கு அழைத்துசென்று,வசதியுடன் தங்க வைத்து  வழிபாட்டை சிறப்பாக நடத்துவதையே தம் தொண்டாக கருதினார்.அவர் குடும்பத்தினரும் சிரத்தையுடன் ஈடு பட்டுள்ளனர்.

முரளியின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று.யாருக்கு யார் ஆறுதல் சொல்லுவது என்று அன்பர்கள் தடுமாறுகிறார்கள்.ஆழ்ந்த துக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை.அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை  BLOG சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம் இழப்பைத் தாங்கும் சக்தியையும் அளிக்க முருகப்பெருமானைப்  பிரார்த்திக்கிறோம்.

Tuesday 25 September 2012

அபிராமி அந்தாதி மற்றும் திருப்புகழ் பாடல்களின் ஒலிப்பதிவுகள்


வணக்கம் அன்பர்களே,

அபிராமி அந்தாதி மற்றும் திருப்புகழ் பாடல்களின் பொருளை , LINK மூலம் அனுபவிக்கிறீர்கள் என்று நம்புகிறோம்.
குருஜி  நமக்கு அளித்துள்ள அபிராமி அந்தாதி மற்றும் பதிகம் பாடல்களை கற்பிக்கும் முறையில் அமைந்த இசை வடிவம் இப்போது  வலைத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.நமது  சென்னை  பிரிவின்   BLOG மூலம் கிடைக்கப்பெறலாம்.  அதன்  LINK        "THIRUPPUGAZHANBARGAL CHENNAI BLOG " என்று நமது  தளத்தில்  கொடுத்துள்ளோம்.அதில் சென்னை அன்பர்கள் 17 .10 .10  அன்று வழங்கிய  27 புதிய பாடல்களின் ஒலிப்பதிவும் , மற்றும் சில ஒலிப்பதிவுகளும்  இடம் பெற்றுள்ளன.அன்பர்கள் பயன் அடைய வேண்டுகிறோம்.


Wednesday 19 September 2012

THIRUPPUGAZH AMIRUTHAM BLOGSPOT BY THIRU SUNDARA RAJAN

 

விநாயர் சதுர்த்தி நன்னாளில் பெருமான் அன்பர்களுக்கு தேக பலமும் ஆத்ம பலமும் அருள பிரார்த்திக்கிறோம் மற்றும் பெருமானின் அருள்ப்ரசாதம் நம் அங்கத்தினர் சாந்தா சுந்தர ராஜன் தம்பதியர் மூலமாக கிடைத்துள்ளது. 

அபிராமி அந்தாதியின் பொருள் கொண்ட BLOG LINK அளித்ததை தொடர்ந்து அன்னையின் அருளால் நம் குருஜி தொகுத்து,இசையுடன் வழங்கியுள்ள 501 பாடல்களுக்கும் ,பெருமளவில் கட்டுரைகளை வழங்கிவரும்  சுந்தரராஜன் தம்பதியினர் திருப்புகழ் அடிகளின் பதவுரையும் ,பொழிப்புரையும் எளிமையான முறையில் அன்பர்களுக்கு அளிக்க தனியாக "திருப்புகழ் அமிர்தம் " என்ற Blog  (THIRUPPUGAZH AMIRUTHAM at "http:/thiruppugazhamirutham.shutterfly.com" and THIRUPPUGAZH AMIRUTHAM SONGS at "htpp:// thiruppugazhamirutham.blogspot.in"  அமைத்துள்ளார்கள் .

தற்போது 85 பாடல்கள் வெளிடப்பட்டுள்ளன.தம்முடைய Blog க்கு link செய்ய நமக்கு பிரத்தியேக அனுமதி வழங்கியுள்ளர்கள்.மற்ற பாடல்கள் வரிசையாக பின் தொடரும்.அவைகளின் மேன்மையை நாம் படித்துத்தான் உணரமுடியும்.அவைகளை அருட் பிரசாதம் என்றே உணருகிறோம்.

அவர்களுக்கு நன்றி என்ற உபசார வார்த்தை கூறி நின்று விடுவது நமக்கு அழகல்ல.அவர்கள் படைப்பை நன்கு படித்து,அசைபோட்டு ,உணர்ந்து,நம் வாழ்க்கை நெறியை அமைத்துக்கொள்வதுதான் நாம் அவர்களுக்கு செய்யும் கைம்மாறு. அவர்கள் மேன்மேலும் பல படைப்புகளை அளிக்க விநாயகர்,முருகப்பெருமானின் பொற் பாதக்கமலங்களை  வணங்குகிறோம்.அவர்கள் வழி நடத்தட்டும்.

சுந்தரராஜன் தங்களுடைய புனிதப்பணிக்கு உறுதுணையாக நிற்கும் Dr  கிருஷ்ணமூர்த்தி,திருவாளர்கள் ஐயப்பன்,நடராசன்,ரத்னசபாபதி முதலியோருக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்திருப்பது .அவரது உயரிய பண்பை எடுத்துக்காட்டுகிறது. அவர்களும் நம் வணக்கத்துக்குரியவர்கள்.

Monday 17 September 2012

அபிராமி அந்தாதி பொருளுடன்



மதுரையில் பிறந்த திரு.குமரன் அவர்கள் தற்போது அமெரிகாவில் பணியாற்றுகிறார்.50க்கு மேற்பட்ட  BLOGS நடத்துகிறார்.உள்ளே புகுந்தால் பிரமிப்பு.அதில் அபிராமி அந்தாதி (நிறைவு பெற்றது )பொருளுடன் கிடைத்தது. 2005முதல் 2008 வரை தனிப்பட்ட முறையில் பாடுபட்டு 100பாடல்களுக்கும் பொருளும், பொழிப்புரையும் எழுதி உள்ளார்.மற்றும்  திருக்கடையூர் சிறப்புடன் பல புகைப்பட வடிவங்களையும் அளித்துள்ளார்.அவரது ஈடுபாடும் ,அயராத உழைப்பும் நம்மை அயர வைக்கிறது .அது அன்னையின் அருள் என்பதில் ஐயமில்லை.
அன்பர்களின் சௌகரியத்துக்காக  அதன் தொடர்பை (LINK)     ABIRAAMI ANDHADHI MEANING  என்ற தலைப்பில் கொடுத்துள்ளோம்.அன்பர்கள் பெருமளவில் பயன் படுத்த வேண்டுகிறோம்.100 பாடல்களும்  2005 முதல் 2008 ஆண்டுகளில் பரவலாக அளிக்கப்பட்டுள்ளது.

Sunday 9 September 2012

நமது நிறுவனர் அமரர் BR.SRI. A.S.Subramania Iyer நினைவு விழா


அமரர்  சுப்ரமணிய ஐயரின் பெரு  முயற்சியாலும் கடுமையான உழைப்பினாலும் உருவானதுதான்  நம் அமைப்பு என்பது நாம் அறிந்ததே . அன்னாரின் நினைவு நாள் ஆகஸ்டு/செப்டம்பர் மாதத்தில் வழிபாடாக சமர்பிக்கும் இத்தருணத்தில் அவரைப்பற்றி சில வார்த்தைகள் கூறுவது எங்கள் தலையாய கடமை என்று கருதுகிறோம்.

ஆரம்பத்தில் சில சங்கீத வித்வான்களும்,மாணவர்களும் விரும்பி நம் குருஜியின் வழியில் திருப்புகழ் பாடல்களை கற்க ஆரம்பித்தனர்.நாளடைவில் பஜனையும் சுக்கில ஷஷ்டி அன்று செம்பூரில் நடைபெற்றது.அது இன்றும் தொடர்கிறது.ஐயரின் விடா முயற்சியாலும் ,உந்துதலாலும் பல அன்பர்கள் திருப்புகழை கற்கவும் பிறருக்கு கற்பிக்கவும் ஆரம்பித்தனர் .முறையாக 1972 ம் ஆண்டு கோலிவாடா மற்றும்  செம்பூர்    பகுதியில் வகுப்புக்கள்  தொடங்கப்பட்டன.

படிப்படியாக வளர்ந்து செந்தில் ஆண்டவன் அருளால் மும்பையின் பல சமுக ,ஆஸ்தீக அமைப்புகளின்    ஒத்துழைப்புடன் ,1975ம் ஆண்டு அருணகிரிநாதரின் 6வது நூற்றாண்டு  கலந்ததன் பொருட்டு  அருணகிரிநாதரின் விழா தொடங்கப்பட்டது, சக்கரை பந்தலில் தேன் மாரி    பொழிந்தது போல் அமைந்தது.பின் சிருங்கேரி ஆசாரிய சுவாமிகள் அருளாசியுடன் 1981 ம் ஆண்டு குருஜி தலைமையில் படி விழா தொடங்கப்பட்டது.
   
இவை எல்லாம் மனித அளவில் அமரர் ஐயரின் தன்னலமற்ற சேவையாலும்,அயராத உழைப்பினாலும்,யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற பரந்த  மனப்பான்மையாலும் தான் சாத்தியமாயிற்று என்பது மறுக்க முடியாத உண்மை.

இவற்றையெல்லாம் விட நாங்கள் மேன்மையாகவும் , உன்னதமாகவும், புனிதாகவும் கருதுவது ,இந்த தெய்வீகப்பணி தொடர தம் குடும்ப வாரிசுகளை முழுமையாக அர்ப்பணித்ததுதான்.இப்பொழுதும் அன்னாரின் துணைவி தள்ளாத வயதிலும் வழிபாடுகளில் ஈடுபடுவது    அன்பர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி  அளிக்கிறது.

மாதுங்காவில் அவரது இல்லம் முருகப்பெருமானின் உறைவிடமாகவே  உணரப்படுகிறது.அதுவே நம் அமைப்பின் அலுவலகமாக செயல் படுவது பெருமைக்குரிய விஷயம்.

பௌராணிகர்கள் கூறுவார்கள் இராமாயணக்கதை உபன்யாசம் எங்கு நடக்கிறதோ அங்கு ராம பக்த ஹனுமான் கலந்து கொண்டு அனுபவிக்கிறார்  என்று.அதுபோல்  நம் அமரர் ஐயர் அவர்களும் ஒவ்வொரு வழிபாட்டிலும் பிரசன்னமாகி நம்மை வழி நடத்துகிறார் என்றே கருதுகிறோம்.அவரது நெருங்கிய நண்பர்கள்  அவருக்கு பேரானந்தத்தை அளித்தது வழிபாடுகளுக்கு பெருமளவில் வரும் அன்பர்களின் திரு கூட்டம் தான் என்று கூறுகிறார்கள்.அதை தொடர்ந்து காப்பாற்ற வேண்டியது அன்பர்களின் தலையாய கடமை மட்டும் அல்ல.நாம் செலுத்தவேண்டிய காணிக்கையும் கூட.

அன்னாரின் நினைவு நாள் செப்டம்பர் மாதம் 16 ம்  தேதி  .அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.அன்புடன் வரவேற்கிறோம்.

Anbargal may kindly share their experience with Amarar Iyer.



Sunday 2 September 2012

Birth Day of our Guruji: ஆவணி - பரணி



பஞ்சாமிர்த வாழ்த்து பாடல்

ஆறுமுகமங்கலத்தில் மதலையொன்று பிறந்ததே
ஆறுமுகப் பெருமானின் திருப்புகழ் பாடவென்றே
பேறு பெற்ற பெற்றோரும் ‘இராகவா’ என்றே
கூறிக்கொஞ்சினர் பால்மணம் மாறாத பாலகனை.
மாறுபடும் நோய் தீர்த்த மருந்தொன்றும் இருந்ததே
ஏறுமயில் வாகனன் ஏகனவன் கடைக்கணியலே
ஆறுமோ ஆவலென பேரன்பு கொண்டவன் மனதில்
நீறுபடு மேனியவன் பக்திக்கொரு வித்திட்டானே!           1

வித்தொன்று மா மரமாகி வளர்ந்து வந்ததே
சத்வகுணத்துடன் பக்தியும் பண்பும் தழைத்ததே
சித்தத்தை சுத்திக்கும் இசையும் வளர்ந்ததே
அத்தனுடன் அன்னை போல் லயமும் கலந்ததே.
உத்தமான உளமதில் சத்திய ஒளி உதித்ததே
சித்திர கவித்துவ திருப்புகழை சரண் அடைந்ததே
தித்திக்கும் கதலிப்பழம்போல் அதுவும் இனித்ததே
இத்தரணி சுவைக்க இச்சையுற்றது அந்நெஞ்சமே!          2

நெஞ்சக் கனகல்லும் நெய்யாய் நெகிழ்ந்துருகியதே
வஞ்சிக்குமரனருளால் திருப்புகழ் பக்தியிசை ஆனதே
கொஞ்சும் பண்ணுடன் சந்தமும் பின்னிப் பிணைந்ததே
மிஞ்சுவாரார் என இவர் புகழ் எங்கணும் பரவியதே.
நெஞ்சையள்ளும் இசையினில் உள்ளம் நிலைத்ததே
பஞ்சனைய மனதில் பக்திக் கனலும் மூண்டதே
பஞ்சம் பிணி துயர் நீக்கும் திருப்புகழ் நிதிதனை
அஞ்சலி செய்வோர் அனைவரும் அள்ளித்தந்ததே!          3

அள்ளித் தந்தது அனைத்தையும் பருகினர் அப்படியே
தெள்ளத் தெளிய வடியும் தேன் போன்ற திருப்புகழை
வெள்ளமென பல்கி பெருகி விண்ணையும் தொட்டதே
கொள்ளை கொண்ட மனங்களில் குகனும் அமர்ந்தானே.
கள்ளமற்ற சிறுவரும் குஞ்சி வெளுத்த மனிதரும்
கிள்ளை மொழி பெண்டிரும் திருப்புகழன்பர் ஆனரே
வள்ளிக் கணவன் பேரில் தேனுண்ட வண்டாயினரே!      4

வண்டாகி நாதமே யோகமாய் குருவும் வாழ்கின்றாரே
தொண்டனிவன் திருப்புகழ்கென்று பேர் பெற்றனரே
பண்டைமொழி செந்தமிழுக்கும் செல்வன் இவரன்றோ
அண்டருலகும் இவரிசைக்கு அடிமை ஆனதன்றோ.
கொண்ட நீர் முற்றிலும் வெல்லம் கரையுமாப்போல்
எண்டிசையிலும் எம் குருவின் பெயர் நிறைந்திடுமே
மண்டலம் நிறை இரவியின் பொற்கிரணங்கள் என
கண்டோர் உளமதில் அவர் இசையொளி பரவட்டுமே!    5

மாக்கணத்துடன் புகழ் ஓதி சாந்தி அளித்தீர்
பார்க்கும் மனங்களில் விரோதம் இல்லை இனி.
ஈர்க்கச் செய்வோம் மனங்களை அன்பினாலே
நோக்கம் இதுவே எம்குருவே என்றென்றும்.
வாக்குக்கோர் அருணகிரியை நாம்கண்டதில்லை
நோக்குகின்றோம் உம்மை அவரின் வடிவிலே.
பூக்கும் மலர் போன்ற எம் இதய கமலங்களில்
நீக்கமற வைத்திருப்போம் உம் பாதகமலங்களையே!      6

-   சாந்தா ராஜன்