Thursday 30 November 2017

அபிராமி அந்தாதி - 25



                                                                   அபிராமி  அந்தாதி - 25
பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே


அன்பர் தொகுத்து அளித்துள்ள விளக்கவுரை 
"பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்"..
உன் அடியவர்களின் பின்னால் திரிந்து அவர்களை அடி பணிந்து அவர்களுக்குப் பணிவிடை செய்து என் பிறப்பிறப்புத் துன்பத்தை அறுத்துக் கொள்ளும் பாக்கியத்தை பலகாலமாக செய்தத் தவங்களின் பயனால் அடைந்தேன்.

உலகத்தோர் இப்பிறப்பில் செய்யும் புண்ணிய பாவங்கள் அடுத்த பிறப்பில் தமது தகுதியை நிர்ணயம் செய்யும் என்று நம்புகிறார்கள்..இதற்கெனவே தான தர்மங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள்..ஆலயத்துக்குச் சென்று இறைவனை வழிபடும் போது இப்பிறப்பின் எதிர்காலநன்மைகளுக்காக வேண்டுகின்றனர்.. இனி எனக்கு பிறவி கிடையாது என்று முழங்கும் அபிராமிப் பட்டர், அதற்கான காரணத்தையும் விளக்குகிறார். உன் திருவடியைப் பற்றியிருக்கக் கூடிய உனது அடியார்களைப் பின் தொடர்ந்து அவர்கட்கு வேண்டிய திருப்பணிகளை நான் செய்து வருகிறேன். எனவே எனக்கு

இனிமேல் பிறவி கிடையாது.. இத்திருப்பணிகளை நான் மேற்கொள்ள வேண்டிய புண்ணியம் எனக்கு எங்ஙனம் கிடைத்தது தெரியுமா? நான் முற்பிறப்பில் பல தவங்களை இயற்றி இவ்வரத்தினைப் பெற்றேன்.

பொருட்செல்வம் மிகப் பெற்றோர், தாம் முற்பிறப்பில் செய்த புண்ணியத்தால் இந்நிலையை அடைந்ததாகப் பெருமைப்பட்டுக்கொள்கின்றனர்.. ஆன்மீக வழியில், உயர்ந்த நிலையை அடைந்த பெரியோர் யாரும் தமது முற்பிறவிப் பயனால் இது எமக்குக் கிட்டியது என்றுமுழங்கியதில்லை.. ஆனால் அபிராமிப் பட்டர் மிக உறுதியாக தனது கருத்தைத் தெளிவுபடுத்துகிறார். மூன்று உண்மைகள்.. ஒன்று. தான் முற்பிறப்பில் செய்த தவங்கள். இரண்டு. அத்தவங்கள் வாயிலாக இப்பிறப்பில் அபிராமி அன்னையின் அடியார்களுக்குச் செய்யும் திருத்தொண்டு. மூன்று. அத்திருத்தொண்டின் வாயிலாக இப்பிறப்புத் துன்பத்தை நீக்குதல். வேறெந்த பிறப்பும் ஏற்படாத உன்னத நிலையை அடைதல். இம்மூன்று உண்மைகளுக்கும் நடுநாயகமாக விளங்குவது அன்னையின் அடியாருக்குச் செய்யும் திருத்தொண்டுதான்.
"முதல் மூவருக்கும் அன்னே"

அன்னை அபிராமியே மும்மூர்த்திகளைப் பெற்றெடுத்தாள் என்பதை இன்னுமொருமுறை தனது பாடலின் வாயிலாகக் கூறுகிறார்.


"உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே" 

எதுவும் தேவையில்லை அன்னை அபிராமியை விடுத்து... என்னும் தன் நிலையில் உறுதியாக இருக்கும் அபிராமிப் பட்டர் அன்னை அபிராமி உலகத்தாருக்குக் கிடைத்த ஒரு அரிய மருந்து என்கிறார். அபிராமியை எண்ணித் துதித்தால் எந்தவித காயமும் ஆறிப்போகும். எல்லாவித நல்நிலையும் தேடிவரும் என்பதே நிச்சயமான உண்மை. உலகத்தார் செய்த புண்ணியம் அவ்வருமருந்தினைப் பெற்றிருப்பது.

"என்னே.?" 

உனது பெருமைகளையெல்லாம் எங்ஙனம் உரைப்பேன்...?

 "இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே"

இனியும் உன்னை நான் மறக்காமல் தொழுது கொண்டிருப்பேன்.

 அன்னையை மறப்பது அபிராமிப் பட்டரால் இயலுமா? எக்கணமும் உன்னை மறவாது தொழுவேன் என்று பறைகிறாரே.... துன்பத்தில் இறைவனை நினைப்பது, இன்பத்தில் இறைவனை மறப்பது .. இதுதான் உலகத்தார் வாடிக்கை.. எனவேதான் குந்தி தேவி, கண்ணனிடம் தனக்கு எப்பொழுதும் துன்பங்கள் வந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று வேண்டினாள். அத்துன்பங்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தால் 

 இறைவனை என்றும் மறவாது தேடிக்கொண்டே இருப்போம் என்பது அவரது கருத்து..

ஆனால் அபிராமிப் பட்டரால் அன்னையை மறப்பது முடியுமா? என்றும் மறப்பதில்லை... ஆயினும் தொழுதல் என்பது வேறு... மறவாதிருத்தல்
என்பது வேறு.. அன்னையை மறவாது நினைப்பது மட்டுமே புண்ணியம் தரும் செயலல்ல... நாத்திக அன்பர்கள் தினம் ஒருமுறையாவது "இறைவன் இல்லை" என்று சொல்லி இறைவனை நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு இறைவனின் திருவருள் கிட்டுமா? எனவே தொழுதல் முக்கியம்.. இனிமேல், எக்கணமும் உன்னைத் தொழுது கொண்டேயிருப்பேன் 
அபிராமி சரணம் சரணம்!!


                                                          பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்



                                                                                                 

                                                          U Tube Link for ANDROID  and   I PAD   PHONE 

                                                               https://youtu.be/bzwYJnC3Ur4



                                                                             அன்பர்கள் இசைக்கிறார்கள் 


                                                                                                                           

                                                               U Tube Link for ANDROID  and   I PAD   PHONE 


                                                                https://youtu.be/nz_5v1oKEJY


                                              அபிராமி சரணம் சரணம்!!
                                                        முருகா சரணம் 

Sunday 26 November 2017

சுப்ரமண்ய புஜங்கத்தின் 11 வது ஸ்லோகம்


                                                         சுப்ரமண்ய புஜங்கத்தின் 11 வது ஸ்லோகம் 

                                         முருகப் பெருமானுடைய திருமார்பைப் பற்றிய  வர்ணனை 
                                                                                                     


புளிந்தேச கன்யா கநாபோக துங்க

ஸ்தனாலிங்கநாஸக்த காச்மீர ராகம் |

நமஸ்யாம்யஹம் தாரகாரே தவோர:

ஸ்வபக்தாவனே ஸர்வதா ஸானுராகம் ||

அன்பர் தொகுத்து அளித்துள்ள விளக்கவுரை 

 முருகப் பெருமானுடைய மார்பு செக்கச் செவேல்னு இருக்காம். பரந்து விரிந்த அந்த மார்புகள், சிகப்பா இருக்கு. அதுக்கு ஆசார்யாள் ரெண்டு காரணங்கள் சொல்றார். 

‘ஹே தாரகாரே’’ தாரகாசுரனுக்கு சத்ருவான ஸுப்ரமண்யப் பெருமானே!

 ‘புளிந்தேச கன்யா கநாபோக துங்க ஸ்தனாலிங்க நாஸக்த காச்மீர ராகம்’ 

புளிந்தன் என்ற வேடனுடைய பெண்ணான வள்ளியம்மையினுடைய கடினமான பெரிய ஸ்தனங்களை ஆலிங்கனம் செய்து கொள்ளும் பொழுது, அந்த ஸ்தனத்தில் அலங்கரிக்கப் பட்டுள்ள குங்குமம் உன்னுடைய மார்பிலும் வந்துட்டதனால சிகப்பா இருக்கு, அப்படின்னு ஒரு காரணம்.

இன்னொரு காரணம், ‘ஸர்வதா ஸ்வபக்தாவனே’, 

எப்பொழுதும் உன்னுடைய பக்தர்களை காப்பாற்ற வேண்டும் என்று உன் மனசுக்குள்ள எப்பவும் 

‘ஸானுராகம்’, 

அந்த அனுராகம், அந்த ஆசை இருந்துண்டே இருக்கிறதனால, ‘ராகம்’ ங்கிற ஸமஸ்கிருத வார்த்தைக்கு சிகப்புனு ஒரு அர்த்தம். உள்ளிருக்கக் கூடிய அந்த கருணை வெளில சிகப்பா தெரியறது.

 ‘தவ உர:’, உன்னுடைய மார்பு செக்கச் செவேல்னு ஆயிடுத்து. கருணையினால சிவந்திடுத்து உன்னுடைய மார்பு. 

அதை ‘அஹம் நமஸ்யாமி’, நான் நமஸ்கரிக்கிறேன்.

ஹ்ருதயம் எங்கு உள்ளது?
நெஞ்சம் எங்கு உள்ளது?
மார்பு எங்கு உள்ளது?  இதயம் எங்கு உள்ளது?
உள்ளம் எங்கு உள்ளது? அனைத்துமே ஒன்றா? 
இரத்தத்தை சுதப்படுத்தி உடல் முழுவதும் அனுப்பும் ரத்தத்தாலும் சதையாலும் ஆன உறுப்புதான் இதயமா?   இதயக்குகை என்கிறார்களே அது எங்கு உள்ளது..

சுப்ரமண்ய புஜங்கத்தின் இரண்டாவது ஸ்லோகத்தில் "மே ஹ்ருதி " என்னுடைய ஹருதயத்தில் என்கிறார்.

கவிதை வடிவில் பார்ப்போம் 

 திருமார்பின் சிறப்பு

வேடவேந்தன் திருமகள் வள்ளி
விரிந்த நகில்கள் மீதயர்ந்த
சேடல் குங்குமச் சேற்றில் தோய்ந்து
திகழும் நின்றன் தடமார்பு
நாடும் அடியர் துன்பம் துடைத்து
நலமே பொங்கச் சிவந்துவிடும்
கோடிய தாரகன் தன்னைக் கடிந்த
குமரன் மார்பைப் போற்றுகிறேன்.


(பலன்        ஆபத்து விலகும்)
  

குறமாதி னிருதுங்க தனகுங்கு மந்தான்
கொடுசேந்த தோஅன்பர் குலமீது கொண்ட
திறமான அநுராகம் வெளிநின்ற தோநின்
திருமார்பில் ஒளிசெந்தி லாயஃது தொழுவேன்.
       

 (குறவேடனின் மகளாகிய வள்ளியின் இரு தனங்களில் அலங்கரிக்கப்பட்டுள்ள குங்குமங்கள் அவளைத் தழுவிய காரணத்தால் முருகனின் மார்பிலும் பட்டு மார்பு சிவந்து ஒளிவீசியதோ? அல்லது, தன் அன்பர் குழாம் மீது அவர்களைத் தடுத்தாட் கொள்ள வேண்டும் என்று மனத்தினுள் எழும் ஆசையினால் மார்பில் சிவப்பு நிறம் தோன்றியதோ? அச்செவ்வொளி வீசும் மார்பினைத் தொழுவேன்.)


துங்க தனம் - உயர்ந்த ஸ்தனங்க
ள் 
.
அநுராகம் .....காதல். காதலின் நிறம் செம்மை என்பது கவி மரபு. 

சேத்தல் - சிவத்தல்.

 (நன்றி....   கௌமாரம் இணைய தளம்)

அருணகிரிநாதர்  அனுபவித்து நமக்கு அளித்தது 

 நெஞ்சக் கன கல்லு என கந்தரநுபூதியை ஆரம்பிக்கிறார்.

இதயம் தனிலிருந்து க்ருபையாகி என்கிறார்.

உள்ளக்கண் நோக்க அருள்வாயே என்கிறார்...

நான் என்று மார் தட்டும் பெருமாளே..

வஞ்சியை முனிந்த கொங்கை மென்குற மடந்தை செங்கை வந்தழகுடன் கலந்த மணி மார்பா என்கிறார்...

 செண்ப காடவி யினுமித ணினுமுயர்
சந்த னாடவி யினுமுறை குறமகள்
செம்பொ னூபுர கமலமும் வளையணி …… புதுவேயும்

இந்து வாண்முக வனசமு ம்ருகமத
குங்கு மாசல யுகளமு மதுரித
இந்த ளாம்ருத வசனமு முறுவலு …… மபிராம

இந்த்ர   கோபமு மரகத வடிவமு மிந்த்ர
 சாபமு மிருகுழை யொடுபொரு
மிந்த்ர நீலமு மடலிடை யெழுதிய …… பெருமாளே
என்கிறார். 

முருகா சரணம் 




Friday 24 November 2017

சுவாமிமலை வள்ளிகல்யாணம் ......செய்தித் தொடர் 1

சுவாமிமலை வள்ளிகல்யாணம் ......செய்தித் தொடர்   1


                                                                                                         




அடுத்து வள்ளி கல்யாண அமைப்பாளர் அருளாளர் அய்யப்பன் அவர்களிடமிருந்து வந்துள்ள செய்தியை அன்பர்களின்     கவனத்திற்கு  அளிக்கிறோம்.




"அன்பர்கள் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளும் சுவாமி மலையில் செவ்வனே  நடந்து பூரண நிலையில் உள்ளன. எவ்வளவு அன்பர்கள் வந்தாலும் நமது ஸ்ரீசுவாமிநாத சுவாமி நம்மை சுகப்படவே வைப்பார். இது அவனுடைய திருக்கல்யாணம்.

வரும் அன்பர்களின் வசதிக்காக பாட்ஜ் (BADGE) முறை இப்போது அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இது உணவு கூடத்தில் ஓர் ஒழுங்கு முறை அவசியம் எனும் கருத்தில் உண்டாக்கப் பட்ட ஒன்று ஆகையால் பகவான் திருக்கல்யாணத்திற்கு வரும் அன்பர்களின் எண்ணிக்கை முன் கூட்டியே தெரிந்தால் தான் அவர்களைக்கான பேட்ஜ் (BADGE) தயார் நிலையில் வைக்க உதவும்.  

ஆகையால் இது வரை பெயர் தராத அன்பர்கள் நமது கூகில் ட்ரைவ் சீட்டிலோ , நேரிலோ அல்லது போன் , இ மெயில் மூலமாகவோ எங்கிருந்து எத்தனை பேர் வருகிறோம் என்பதை உடனே தெரிவித்து விட வேண்டுகிறேன். இவ்வளவுக்கும் பொருள் வேண்டுமே. அதையும் அவன் உங்களிடம் சொன்னது போல் அனுப்பி வைக்க வேண்டுகிறேன்."

Those who wish to send their donations thro bank may please transfer the sum thro' NEFT to the following account.

P. C. Gopi,
Account number : 10912124541
STATE BANK OF INDIA
KALPAKKAM BRANCH
IFS : SBIN0002219


 கீழ் காணும் கூகிள் ட்ரைவ் எக்ஸெல் சீட்டில் திருக்கல்யாணத்திற்கு வரும் அன்பர்களின் எண்ணிக்கை  , நன்கொடை அனுப்பிய தொகை போன்றவற்றை எல்லா அன்பர்களும்,  பார்த்து , தாங்கள் விரும்பியதை அந்த அந்த சிஸ்ஸில் பதிவு செய்ய வேண்டுகிறேன். "

கூகிள் ட்ரைவ் எக்ஸெல்  ஷீட் 

Link 
  


Sheet  contains  3  Divisions


1.Details of donation paid/committed


Anbars can register their donations paid  /to be paid


2.Details of group/individuals participating in the Kalyana Vaibavam in numbers 


3.Details of accommodation details and contact person/Phone Numbers etc



We request all the Anbars  to make use of the  Sheet  and register the required  infomation.


தொடர்புக்கு 

Thiru  P.Aiyappan         cell   919444049061
E Mail Id                         p.ayappan@gmail.com




                                            முருகா சரணம் 






Wednesday 22 November 2017

வள்ளிகல்யாணம் சுவாமிமலையில்



                                                              வள்ளிகல்யாணம் சுவாமிமலையில் 

                                                                  

                                                                                                                                                                              
இறையருளாலும் குருவருளாலும்,திருவருளாலும் அடுத்த வள்ளிகல்யாண வைபவம் அறுபடை வீடு சுவாமிமலையில் வரும்  டிசம்பர் மாதம் 10 ம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி அளவில் திருப்புகழ் அன்பர்களால் வெகு சிறப்பாக நடை பெற  உள்ளது என்பதை மீண்டும்நினைவூட்டுகிறோம்.இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில் அன்பர்கள் தயார் நிலையில் உள்ளார்கள் என்பதில் ஐயமில்லை.

திருப்புகழ் தொண்டர்கள் எல்லோருடைய ஒத்துழைப்பில் மட்டுமே நடை பெற உள்ள இந்த வைபவத்துக்கு அன்பர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி செய்து  குடும்பத்துடன் பெருமளவில் கலந்து கொண்டு  வள்ளி தெய்வயானை சமேத முருகப்  பெருமானின் பேரருள் பெற வேண்டுகிறோம்.


அழைப்பிதழ் 


                                                                                                   



 இந்த சந்தர்ப்ப பத்தில்,அருணகிரியாரின் நவமணிகளாகத் திகழும் ஒன்பது படைப்புகளிலிருந்து எடுத்து தொகுக்கப் பட்டுள்ள வள்ளி கல்யாண பாடல்களின்  (TEXT) தொகுப்பை அன்பர்களின் பயனுக்காக வழங்குகிறோம்.

புத்தகத்தொகுப்பின் முன்னுரையில் வள்ளி கல்யாண வைபவம் சிறப்பை போற்றியும் எப்படி மற்ற சம்பிரதாய பந்ததிகள்,பாடல்களிலிருந்து மாறுபட்டு தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் திருமணத்துக்கு தமிழ்ப் பாடல்களைக் கொண்டே நிகழ்த்த வேண்டும் என்ற அன்பர்களின் எண்ணத்தையும்,ஆசையையும் அற்புதமாக விளக்கியுள்ளார்கள்.

பாடல்களை பார்ப்போம்.

Kindly  Click and you can view all 40 Pages of the Book

New Doc 2017-11-21 (5).pdf


மற்றும் குருஜி 2004ம்  ஆண்டு பழனியில் நிகழ்த்திய வள்ளி கல்யாண வைபவத்தையும் அளிக்கிறோம்.



                                                             U Tube Link for ANDROID  and   I PAD PHONE 
                                               https://youtu.be/XcniXigDaJk

                                                முருகா சரணம்   
                                                                                 

                                                                                     


                                                                                       

 

Friday 17 November 2017

அபிராமி அந்தாதி-24


                                                 அபிராமி அந்தாதி-24
                                                                                                     

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே!
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.


அன்பர் தொகுத்து அளித்துள்ள விளக்கவுரை 
மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த அணியே, 

குழைந்தையை ஒரு தாய், 'என் கண்மணியே' என்று அழைப்பாள். அப்படி அழைத்து பேசுகிறார் பட்டர். 'மணியே' என்று தொடங்குகிறார்.
என் கண் மணி நீ. அந்த மணியின் ஒளியும் நீ என்று சொல்கிறார். அப்படிச் சொன்னவருக்கு, மணி மாலைகள் நினைவுக்கு வந்தன. என் கண் மணி மட்டும் அல்ல, நல்ல மாணிக்கமும் நீ, அந்த மாணிக்க மணிகளால் விளைந்த ஒளியும் நீ, அந்த ஒளிரும் மாலையால் ஆன அழகிய அணி புனைந்தவளும் நீ அல்லவா என்று வியக்கிறார்.
அணியும் அணிக்கு அழகே -

 அணியும் அந்த அணிகலனுக்கு அழகாகத் திகழ்பவளே!
அப்படி வியந்தவருக்கு ஒன்று தோன்றியது : இந்த மணி மாலையாலா அபிராமிக்கு அழகு? இல்லை இல்லை. எம் அம்மை அபிராமியால்தான் இந்த மணிமாலைக்கே அழகு என்று முடிவு செய்கிறார். அத்னால்தான் 'அணியும் அணிக்கு அழகே' என்று சொல்லுகிறார்.

அணுகாதவர்க்குப் பிணியே -

நின்னை வணங்காதவர்களுக்கு அவரவர் வினைப்பயன் படி பிணியாக நிற்பவளே!

அணுகாதவர்க்குப் பிணியே என்று ஓர் அபாண்டத்தை அன்னை மீது தாங்கள் சாற்றுவது எப்படிப் பொருந்தும்? என்று சரபோஜி மன்னர் கேக்கறார் பட்டரிடம்.
அந்த அன்னை தன்னை நாடினாலும், நாடாவிட்டாலும் எல்லோருக்கும் அருள் புரிபவள் அல்லவா?” என்று சந்தேகம் கேட்டார்.
பட்டர் சொல்றார்,
சூரியன் அஷ்ட திக்குகளிலும் தன் கதிரொளியை வீசிப் பரப்புகிறான். ஆனால் பூமியோ ஒரு பக்கம் வெளிச்சத்தை வாங்கி மறுபக்கம் இருளாகிப் போகும் படியல்லவா திரும்பிக் கொள்கிறது. சூரியனை நோக்கித் திரும்பும் பகுதி பகலாகவும், சூரியனுக்கு எதிராக விலகிக்கொண்ட பகுதி இருளாகவும் ஆகிவிடுகிறதே? அது சூரியனின் குற்றமா? இல்லையே!அதுபோல் 

நின்னை வணங்காதவர்களுக்கு அவரவர் வினைப்பயன் படி பிணியாக நிற்பவளே!

 அதுபோலத்தான்,அம்பிகையைச் சரணடையும் ஆன்மாக்கள் பிறப்பு, இறப்பு சுழற்சிகளிலிருந்து விடுபடுவர்

பிணிக்கு மருந்தே 

எவரொருவர் உன்னைச் சரணடைகிறார்களோ அவர்களுக்கு மருந்தாகவும் விளங்கக் கூடியவளே!

அன்னையைப் பிரிந்தால் நாம் அடையும் பிணிகளுக்குக் காரணம் நாமா? அல்லது அவளா? அவள் கருணை மிக்கவள். நமக்கு அருள் புரியவேண்டும் என்று காத்துக் கொண்டிருப்பவள். நாம் அவளைப் புரிந்து கொள்வதில்லை. தாயின் கரங்களிலிருந்து இறங்கிச் சென்று விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையை எப்படி ஒரு தாய், வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் எப்போதும் நினைத்துக்கொண்டே இருப்பாளோ, அது போல கர்ம வினைகளால் நாம் அவளை விட்டு விலகி வந்து விட்டாலும், அவள் நம்மை மறப்பதில்லை..

அமரர் பெருவிருந்தே - அமரர்கள் என்றும் வணங்கி ஏத்தி மகிழும் படி அமைந்தவளே!

பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே - உன் திருமலர்ப் பாதங்களைப் பணிந்த பின் வேறெந்த உலக இன்பத்தையும் வேண்டி நில்லேன்.

                                                            பாடலை குருஜி  கற்பிக்கிறார் இசையுடன்



                                                                                                          
                                                      U Tube Link for ANDROID  and   I PAD   PHONE 
                                              https://youtu.be/pEt3Kp28zOg

                                                                              அன்பர்கள் இசைக்கிறார்கள் 

                                                                                                          
                                                       U Tube Link for ANDROID  and   I PAD   PHONE 
                                              https://youtu.be/HeonpoXSNA

                                                                         அபிராமி சரணம் சரணம்!!

                                                                                  முருகா  சரணம் 

Tuesday 14 November 2017


    பிரம்மஸ்ரீ .அ.சு.சுப்பிரமணிய ஐயர் நூற்றாண்டு நினைவு விழா

                                               நிறைவு பகுதி ...2

                                                                         


 விழாவுக்கு சென்னை அன்பர் நீலகண்டனிடமிருந்து வந்த   வாழ்த்து செய்தியை மணிசார்  அன்பர்களுக்கு தெரிவித்தார்.


ஐயர் குடும்பத்தின் பிரதிநிதியாக  அன்பர் சுரேஷ்  விழா அமைப்பாளர் ரமேஷ் குடும்பத்தினருக்கும்,விழாவை சிறப்பாக நடத்த பல விதங்களில் உதவிய அனைவருக்கும் நன்றி செலுத்தினார்.


அதுவரை பலவித உணர்ச்சிக் கலவையில்    மெய் மறந்திருந்த அன்பர்கள் வழிபாடு தொடங்கும் நிலையில் தங்களை "தவமுறை த்யானம் "வைக்க தயாரானார்கள்.

வழிபாட்டைப் பற்றி பேசுவது நம் மரபு இல்லை என்றாலும் இங்கு சில குறிப்பிட்ட தகவல்களை கூற வேண்டியது கடமை என்ற அளவில் வெளிப்படுத்துகிறோம்.

மூன்றரை மணி நேரம் நீடித்த வழிபாட்டில் இடம் பெற்ற 12 விருத்தங்களும் அன்பர்களை நெகிழ வைத்து பெருமான் சந்நிதானத்துக்கு அழைத்துச் சென்றன.. அதில்  6 விருத்தங்களை  அய்யரவர்களது குடும்பத்தின் அன்பர்கள் இசைத்தார்கள் என்பது குறிப்பிடப்படவேண்டிய அம்சமாகும்.

"வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி
     வாய்பாறி நிற்குமெனை ...... அருள்கூர

வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது
     வாரே னெனக்கெதிர் முன் ...... வரவேணும்"


என்று மனம் உருகி அழைத்தபோது பெருமான் அன்பர்களின் மனக்கண்களின்  முன் தோன்றி அன்பர்களை பரவசப் படுத்தினான் .


பிரார்த்தனை,சாந்தி ஸ்லோகத்துடன் இனிதே நிறைவுற்றது.

வழிபாட்டை  முழுவதும் திரும்பவும் கேட்டு அனுபவிப்போம்.


                                                                                                        
                                                    

                                                             U Tube Link for  ANDROID  and   IPAD   PHONE

                                                                         https://youtu.be/MgKjpvp8clA  

விழாவில் பெருமளவில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துவதோடு நம் கடமை முடிந்ததா ?இல்லை.மாறாக ஆரம்பம் தான்.அன்பர்கள் எல்லோருடைய மனத்திலும் நம் இயக்கத்தின் எதிர்காலம் பற்றி பெரும் கவலை பற்றியுள்ளது மறுக்க முடியாத உண்மை.குருஜியின் மீதுள்ள பக்தியாலும்,குருத்துவ தத்துவத்தினாலும்எண்ணற்ற  குடும்பங்கள் அவர்களது  சொந்தங்கள் எல்லோரும்முழுமையாக  இன்றளவும் இயக்கத்துக்கு தங்களை அர்ப்பணித்துள்ளார்கள்  என்பது கண்கூடு.அந்த வகையில் நாம் அடுத்த தலைமுறையினரை ஈடு படுத்த வேண்டியது நம் கடமை. அவர்களை வகுப்புக்களுக்கும்,வழிபாட்டுகளுக்கும் அழைத்துச் செல்வோம்.தினம் ஒரு திருப்புகழ் என்ற தத்துவத்தோடு பொருளுடன்,இசையுடன் கற்போம்.தற்போதுள்ள பல இணையதள வசதிகள்,மின்அனு சாதனங்களின்மூலமாகசுலபமாகவும்,விரைவாகவும் கற்போம். தொண் டர்களை உருவாக்கி மூத்த அன்பர்களின் சுமையை குறைப்போம்.இயக்கத்தை புதிய உச்சத்துக்கு இட்டுச் செல்வோம்.


இதுவே நம் நிறுவனர் அய்யருக்கும்,குருஜிக்கு செலுத்தும் காணிக்கையாகும்.


முருகா சரணம்.
          

Friday 10 November 2017


    பிரம்மஸ்ரீ .அ.சு.சுப்பிரமணிய ஐயர் நூற்றாண்டு நினைவு விழா

                                                   நிறைவு பகுதி ...1
                                                                                               
                                 




வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்


(இவ்வுலகத்தில் வாழ வேண்டிய முறைப்படி வாழ்கின்றவன், மேலுலகத்திலுள்ள தேவர்களுள் ஒருவனாக மதிக்கப்படுவான்.)

என்ற வள்ளுவரின் வாக்குக்கு இணங்க ,வையகத்தில் எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ்ந்து காட்டியதோடு மட்டுமல்லாமல் ,நம் மையும்  அப்படியே  வாழ, வழி காட்டியாக நம்மிடையே வாழ்ந்து  முருகபக்தி யோடு அன்பு அவிரோதம் தொண்டு பாசம் முதலியவற்றை ஊட்டி நம் இதயத்தில் என்றும் தெய்வமாக உறையும் சுப்பிரமணிய அய்யரின் நூற்றாண்டு விழா திட்டமிட்டபடி நவம்பர் 5ம்  நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

நமக்கு அய்யரும் ,குருஜியும் இரண்டு பேர் அல்ல.இருவரும் ஒருவர்தான்.அந்த வகையில் இருவரையும் நினைவு கூறும் வகையில் விழா அமைந்தது என்பதில் ஐயமில்லை.


அந்த வைபவத்துக்கு அவரது குடும்பத்தினர் முழுவதும்  சிறியோர் முதல் முதியவர் வரை 
கலந்து கொண்டதில் ஆச்சர்யமில்லை.

மறுபடியு ம்  கீழ்க்கண்ட திருக்குறள் பாடல்கள்  நினைவுக்கு வருகின்றன.
1.தந்தை மகற்காற்று நன்றி அவையத்து 
முந்தி இருப்பச் செயல்.
         விளக்கம்:
தந்தை மகனுக்குச் செய்யும் நன்மை என்னவென்றால், அவனைக் கற்றவர் சபையில் முதன்மை அடையுமாறு செய்தலாகும்.
         2.மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி,
        ‘இவன் தந்தைஎன் நோற்றான் கொல்’ எனும் சொல்.
விளக்கம் 
மகன் தந்தைக்குச் செய்ய வேண்டிய உதவி, ’இந்த மகனைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தாரோ’ என்று உலகம் சொல்லுமாறு செய்வித்தல்.

இந்த இரண்டு குறள்களும் அய்யரின் குடும்பத்துக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும். 

 இந்த வைபவத்துக்கு காத்திருந்த மும்பை மற்றும் 
,புனே அன்பர்கள் காலை 7.30 அளவில் அரங்குக்கு குவியத்தொடங்கினர்.

"வாதம் பித்த மிடாவயிறு ஈளைகள்" என்று தொடங்கும் திருப்புகழ் பாடலில் குறிப்பிட்டுள்ள நோய்கள்,உடல் ,மன வேதனைகள் சன்னிதானத்தில் நுழையு  முன்பே கழன்று கொண்டன.உற்சாகத்துடன் அன்பர்கள் வதனங்களில்  தவழ்ந்த பிரகாசம்  அரங்கத்தின் பிரகாசத்தை மேலும் மெருகூட்டின.


சன்னிதானத்தில் விநாயகர்,முருகப்பெருமான்,அருணகிரியார் .மாதுங்கா தாத்தா,குருஜியின் திரு உருவங்களுடன் அய்யர் குடும்பத்தில்  250 ஆண்டுகளாக பூஜிக்கப் படும்  தம்புராவும் இடம் பெற்றிருந்தது அன்பர்களை பரவசப்படுத்தியது.


விழா அமைப்பாளர் அன்பர் ரமேஷ் கூடியுள்ள அன்பர்களை வரவேற்றார்.ஐயர் அவர்களை சிவபெருமானுக்கு மனதிலேயே கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி சிவத்தொண்டு புரிந்து தன வாழ்க்கையையே அர்ப்பணித்த 63 நாயன்மார்களில் ஒருவரான பூசலார் நாயனாரை ஒப்பிட்டு  புகழாரம் சூட்டினார்.


 ஐயரைப்பற்றி நினைவுகளை அன்பர்களுடன் பகிர்ந்துகொள்ள  குடும்பத்தினருக்கு அழைப்பு விடுத்தார்.


முதலாவதாக அய்யரின் மருகனும்,மும்பை வட்டாரத்தின் தலைவரும்,நல்லாசிரியருமான குரு பாலசுப்ரமணியம் சார் நினைவு கூர்ந்தார். அவர் உரையின் சுருக்கம்.


."ஆண்டவன் அமைத்துக் கொடுத்ததுள்ள இந்த நூற்றாண்டு விழா அன்பர்களுடையதுதான்."


பூஜையில் வைக்கப்பட்டுள்ள  தம்புரா 250 ஆண்டுகளாக அய்யரின் குடும்பத்தில் உள்ளது.அந்த தம்புரா ஸ்ருதியில்தான்  அவரின் பாட்டனார் சுப்பிரமணிய ஐயர்  இசையுடன்  ராமாயணம்  போன்ற இதிகாச புராணங்களை சங்கீத  உபன்யாசம் செய்தவர்.பின் அவரது புத்திரர் சுப்பையர் (அய்யரின் தந்தை )தொடர்ந்து திருப்புகழ்,முருக வழிபாட்டு பாடல்களுடன்  இசைத்தொண்டில் ஈடுபட்டார்.

அவருடைய வாரிசுகள்தான் அய்யர்,குருஜி, தங்கை பாகிரதி அம்மாள்.அய்யர் 1940ல் மும்பைக்கு குடியேறினார்.பின் வந்த குருஜிக்கு முறைப்படி சங்கீதம் பயிற்றுவித்து நாளடைவில் தியாகராஜ சபா ஆரம்பித்து அதன் செயலாளராகவும் ஆக்கினார்.


அய்யர் கடைபிடித்த அன்பு,அவிரோதம், தொண்டு முதலிய கொள்கை பிடிப்புகள்   ஈடு இணை யற்றது.முதல் இரண்டும் சுலபம்.ஆனால் தொண்டு செய்வது என்பது மிகவும் கடினமானது."என்றென்றும் தொண்டு செய்ய அருள்வாயே " என்ற அருண கிரியின் வாக்கின்படி,திருப்புகழ் தொண்டு மட்டுமல்லாமல் ,அன்பர்களின் இல்லத்து கல்யாணம் போன்ற மங்கல காரியங்களுக்கும் பொறுப்பேற்று,முன்னின்று தொண்டாற்றியவர்.


அவருக்கு கோபம் என்பதே வராது.எப்பொழுதும் சாந்தம் தான்.ஆண்டவன் துணையுடன் எந்த செயலிலும் முழு மனதுடன் ஈடுபட்ட அந்த மஹான் எனக்கு மாமனார் மட்டும் தான்.அன்பர்களுக்கு .....மாமா...தாத்தா ..எல்லாம்.."


ராஜி மாமி உணர்ச்சி பெருக்கால்  மௌனமாகி ,சகோதரி கமலு மாமியை  உரையாற்ற பணித்தார்.


அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரை
தந்தையிடம் நேரடியாக பேசும் விதத்தில் அமைந்தது.

தமிழில் சுருக்கமாக

"நான் இங்கு சொல்லப்போவதெல்லாம் எங்கள் மொத்த குடும்பத்தின் நினைவலைகளின்  வெளிப்பாடுதான்.

பாச மிகு தந்தையே ,

தங்களின்  100வது ஆண்டு நினைவு விழா எங்களுக்கும் ,  அன்பு பாசம் பக்திமரியாதை வணக்கங்களை செலுத்த இங்கு குழுமியுள்ள  அன்பர்களுக்கும்  இந்தநாள் சிறப்புமிக்க  பொன்னாள் ஆகும்.

நீங்கள் எங்கள் சிந்தனையிலும்,செயலிலும் என்றும் கூட இருந்து வழி நடத்துகிறீர்கள் .குழந்தைகளான எங்களுக்கும் ,பேரன்,பேத்திகளுக்கும் நல்  ஒழுக்கத்தையும்,உயர்ந்த குணங்களையும்,நற்பண்புகளையும் ஊட்டி எங்களை இன்றளவும் உன்னதமான நிலைக்கு உயர்த்தியுள்ளீர்கள்.நாங்கள் என்றென்றும் நண்றிக்  கடன் பட்டுள்ளோம்.

 இன்று  உயர்ந்த நிலையில் உலவும் தியாகராஜ சபா ,நாதலோலா,குறிப்பாக திருப்புகழ் அன்பர்கள் அமைப்பு  தங்களின் தன்னலமற்ற  சேவையினாலும் கடும் உழைப்பினாலும் தான்   உறு வானவைஎன்பதைஅன்பர்கள்இதயபூர்வமாகஉணர்ந்தவர்கள்   அவர் களின்  அன்பையும் நன்றியையும் காணிக்காயாக சமர்ப்பிக்க இங்கு குழுமியுள்ளார்கள்..

 உயிருக்கு உயிரான  தங்களின்   இளைய சகோதரர்  பற்றி  எங்களிடம் அடிக்கடி விவரித்ததைப்பற்றி நாங்கள் நினைவு கூறுகிறோம்.தங்களைவிட 12 வயது குறைவான அவரை மிகவு ம் நேசித்ததீர்கள்,வளர்ச்சியில் மிக்க கவனம் செலுத்தினீர்கள்.மும்பைக்கு அழைத்து,கர்நாடக சங்கீதம் பயில,வல்லுநர் ஆக்க  உறு  துணையாக இருந்தீர்கள். " திருப்புகழ் அன்பர்கள் " அமைப்பு இன்று இந்த நிலையில் உயந்து நிற்க அந்த கர்நாடக சங்கீதம் தான் உறு  துணையாக இருந்தது .அன்பர்களால்  குருஜியாக வணங்கப்படுகிறார். .முருகப்பெருமானின் பேரருள்  அன்றி வேறு  ஒன்றும் இல்லை.

இந்த சந்தர்ப்பத்தில் ,உங்களுக்கு எப்போதும் தங்கள் பணிக்கும் தொண்டுக்கும்உறு  துணையாக இருந்து,பின் எங்களையும் ஊக்குவித்து இயக்கத்தை மேன்  மேலும்  பேணி வளர்த்த மாதுங்கா  மாமி என்று பாசத்துடன் அழைக்கப்பட்ட எங்கள் அன்னையை நினைவு கூர்ந்து வணங்குகிறோம்.

தங்களின் நற்பெயரையும்,கீர்த்தியையும் எங்களுக்கு போதித்த மேற்கூறிய நற்பண்புகளையும் தொடர்ந்து கடைப்பிடித்து நம் இயக்கத்தை மேலும் உன்னத நிலைக்கு கொண்டு செல்ல  அன்பர்களோடு என்றென்றும் பாடுபடுவோம் .

புதல்வர் மணி சாரின் நினைவலைகள்


அந்த காலத்தில் தொலைபேசி வசதியும் மற்ற சௌகரியங்களும் எதுவும் கிடையாது.மாதுங்கா பஜன் சமாஜ் வாசலில் தான் தொண்டர்கள் கூடுவார்கள்.தந்தை வழிபாடு நேரத்துக்கு இரண்டு மணிநேரம் முன்னதாகவே வந்து ஏற்பாடு களை  செய்வார்.வழிபாடு முடியும் வரை டென்ஷன் தான்.அன்பர்களை ஊக்குவித்து தொண்டில் ஈடுபட வைத்தார்.அமைப்பின் வெள்ளிவிழா வுக்காக மிகவும் பாடுபட்டார் சதாபிஷேகத்தை வீட்டிலேயே மிக எளிய முறையில் தான் நடத்தினார்.


இளைய மருகன் ராமஸ்வாமி அய்யர்


"தியாகராஜ சபா தொடங்கி குருஜியை இசையிலும் முருக  பக்தியிலும் தீவிரமாக ஈடுபடுத்தி னார் .குரு பாலு சார் ,ராஜி மாமி தங்கள் இசை திறமையினால் மேலும் மெருகூட்டினார்கள்  . முருகன் நமக்கு எந்த கஷ்டம் வந்தாலும் முன்னின்று காப்பாற்றுவான் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் செயல்பட்டார்.அதனால் தான் திருப்புகழை இந்த அளவில் பரப்ப முடிந்தது."


அய்யர்அவர்களோடு தொண்டாற்றியமற்றஅன்பர்களின் உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள்  அடங்கிய  குறும் படத்தொகுப்பு திரையிடப்பட்டது.



நிகழ்ச்சிகளின் அடுத்த பகுதி தொடரும் 


சில  புகைப்படங்களின் தொகுப்பு.

                                                                                                                                       




                                                           



















                               


                                                                                    
                                                                                   



                      




                                                முருகாசரணம்