Friday 5 January 2018

சுப்ரமண்ய புஜங்கம் 13



                                                                   சுப்ரமண்ய  புஜங்கம்   13

                                                                                                    


சுப்ரமண்ய  புஜங்கம்   13

ஸதா சாரதா ஷண்ம்ருகாங்கா யதி ஸ்யு:

ஸமுத்யந்த ஏவ ஸ்திதாச்சேத் ஸமந்தாத் |

ஸதா பூர்ணபிம்பா: கலங்கைஸ்ச ஹீனா

ததா த்வன்முகானாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம் ||


அன்பர் தொகுத்தளித்துள்ள விளக்க உரை 


ஸ்லோகம்  2 ல் 

"ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்

ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம் |

சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே


முகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம் ||"


  ‘என் மனதில் உன் ஆறுமுகங்களோடு கூடிய ஒரு ஜோதி, ஒரு ஒளி பிரகாசிப்பதனால் தான், ஒண்ணுமே தெரியாத எனக்கு, எழுத்தும் தெரியாது, சொற்களும் தெரியாது, பொருளும் தெரியாது, கவிதையும் தெரியாது, உரைநடையும் தெரியாது. என் வாக்குல ஸ்லோகம் வறது, நான் இந்த ஸ்தோத்ரத்தை பண்றேன்ன்னு துதித்த ஆதி சங்கரர்  அந்த ஆறு முகங்களையும் மீண்டும்  வர்ணிக்கிறார்.

ஹே ஸ்கந்தா! நான் உன்னுடைய முகங்களுக்கு ஸாம்யமா சந்திரனை சொல்லணும்னு ஆசைப் படறேன்.

 ஆனால் ‘ஸதா’ – எப்பொழுதும், 

‘சாரதா:’ சந்திரன் சரத் காலத்துல இருக்கிற மாதிரி, சரத் காலத்துல சந்திரன் மேகங்கள்லாம் இல்லாம ரொம்ப ஸ்வச்சமாக அழகாக இருக்கும். அந்த சரத்காலத்துல இருக்கிற மாதிரி, 

‘ஷண்ம்ருகாங்கா:’ ஷஷாங்கா: ம்ருகாங்கா: இதெல்லாம் சந்திரனுக்கு பெயர். ஷஷம்-ன்னா முயல். அந்த சந்திரன்ல ஒரு அடையாளம் இருக்கே, அது முயல் மாதிரி இருக்கு. 

ம்ருக: ன்னா மான், மான் போன்ற அடையாளம், கருப்பா ஒரு அடையாளம் இருக்கு இல்லையா சந்திரன்ல. அதனால அதுக்கு ம்ருகாங்கா: ன்னு பேரு. ‘‘ஷண்ம்ருகாங்கா:’ ஆறு சந்திரன்கள்,

 ‘பூர்ணபிம்பா:’ பூர்ண சந்திரன்கள், பிறை சந்திரன்லாம் இல்லை. முழு நிலவாக ஆறு சந்திரன்கள், மான் மாதிரி அடையாளத்தை உடைய சந்திரன்கள், 

‘ஸமந்தாத்’ – எல்லா பக்கங்களிலேயும் சேர்ந்து 

‘ஸமுத்யந்த ஏவ:’ உதிச்சுதுன்னா 

‘ஸ்த்திதா: சேத் யதி ஸ்யு:’ எப்பொழுதும் ஸ்திதமா அந்த ஆறு சந்திரன்களும் உதிச்சு, அது எல்லாம் முழுச் சந்திரனா இருந்து, அந்த ஆறும் எப்பவும் பிரகாசிச்சிண்டு இருந்துதுன்னா, அப்ப உன்னுடைய முகத்துக்கு உவமை சொல்லலாமான்னு நான் நினைப்பேன்.

 அது கூட உன் முகத்துல ஒரு கஸ்தூரி திலகமோ, அது மாதிரி உன் முகத்துலேயும் ஒரு அடையாளம் இருந்து, சந்திரன்லேயும் ஒரு களங்கம் இருக்குன்னா சரி. இது ஒரு உவமைன்னு சொல்லலாம் 

‘ஸாம்யம் ப்ருவே’ ஸமமாக சொல்லலாம்னு ஆரம்பிப்பேன்.

உன்னுடைய முகத்துல கஸ்தூரி திலகம் மாதிரி எதுவும் இல்லாமலே, சாதாரணாமாவே, எப்பொழுதும் உன் முகம் பிரகாசிக்கறது. எந்த அலங்காரமும் இல்லாமல் இருக்கும் அந்த ஆறுமுகங்களுக்கு நான் ஏதாவது சொல்லணும்னா

 ‘கலங்கைஸ்ச ஹீனா: பூர்ணபிம்பா:ததா த்வன்முகானாம்

 சந்திரன் எப்பயாவது இந்த களங்கமே இல்லாம, பூர்ண சந்திரனாக, ஆறு சந்திரன்கள் உதிச்சுதுன்னா, அப்போ நான் அதை உவமையாக சொல்வேன். சந்திரனோ எப்பொழுதும் களங்கத்தோடு தான் இருக்கு, ஒரே ஒரு சந்திரன் தான் இருக்கு, அது மாசத்துக்கு ஒரு நாள் தான் பூரண சந்திரனாக இருக்கு, அதுவும் சரத்காலத்துல தான் நன்னா ப்ரகாசிக்கறது, மத்த காலங்கல்லாம் மேகத்துகுள்ள போயிடறது. இப்படி இருக்கும் போது உன்னுடைய முகத்துக்கு நான் எப்படி சந்திரனை உவமையாக சொல்ல முடியும்ன்னு வேடிக்கையா சொல்றார்.

உன்னுடைய முகம் உவமை சொல்ல முடியாத அளவுக்கு அழகா இருக்கு. நிருபமான முகங்களா இருக்குன்னு சொல்ல வரதை, இந்த மாதிரி ஆச்சார்யாள் வேடிக்கையா சொல்ற மாதிரியும், அவ்வளவு அழகு அந்த முகத்தினுடைய ஜோதி என்று அப்படி சொல்றார்.


முகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம் ||"

அப்பேற்பட்ட அந்த ஆறுமுகங்களுக்கு சந்திரனையெல்லாம் உவமையா சொல்ல முடியாது ன்னு முடிச்சுடறார்.

அருணகிரிநாதர் 

தண்டையணி எனத்தொடங்கும் திருப்புகழில் 

கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும் கண் குளிர என்றன் முன் சந்தியாவோ என்கிறார்.

முருகா சரணம் 

No comments:

Post a Comment